யுவதியிடம் பேயோட்டம், வாழ்வை இழந்த இளம் பெண்

யுவதியிடம் பேயோட்டிய சோதிடர், வாழ்வை இழக்க வைத்த சாதனை

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைவலி என கூறிச்சென்ற இளம் யுவதிக்கு ஜோதிடம் பார்த்த நபர் உடம்பில் பேய் இருப்பதாக கூறி உள்ளங் காலை சுட்ட பரிதாபமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட யுவதி ரஞ்சனி குமாரி (16) 77ம் கட்டை, சுவ உதான கம்மாணய, மொறகேவ-ஹொரவ்பொத்தான பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த யுவதிக்கு தலைவலி காணப்பட்டதால் ஜோதிடம் பார்ப்பவரிடம் நூலை போட்டு விட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற வேளை யுவதிக்கு உடம்பில் பேய் காணப்படுவதாக தெரிவித்தார்.

பின்னர் இரும்பை நெருப்பில் போட்டு இரண்டு உள்ளங் கால்களையும் சுட்டு காயப்படுத்தியதாகவும் யுவதியின் சகோதரி வசந்தா ஸ்ரீமதி கவலையுடன் அழுத வண்ணம் தெரிவித்தார்.
இரண்டு கால்களையும் சுட்ட பின்னர் உடம்பில் பேய் விலத்திச் சென்றதால் யுவதியின் கால் பத்தியதாக ஜோதிடம் பார்த்த நபர் உறவினர்களிடம் குறிப்பிட்டதாகவும் தெரியவருகின்றது.



உண்மையாகவே பாதிக்கப்பட்ட யுவதியின் கஷ்ட நிலையை வீட்டுக்கு சென்று பார்த்தால் அவதானிக்க முடியும். பொலிஸார் ஏழைக் குடும்பத்தில் பிறந்த யுவதிக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இப்படியாக ஏமாற்றிப் பிழைக்கும் ஜோதிடர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அத்துடன் இப்படியானவர்கள் தொடர்பில் ஜோதிடருக்கு அதி உச்ச தண்டனையினை வழங்குவதன் மூலமே இப்படியான போலி ஜோதிடர்களை உருவாவதைத் தடுக்க முடியும்.

Comments