ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

 பஸ்ஸை பிடிக்கச் சென்ற ஆசிரியையின் உயிரை பலியெடுத்த சாரி

தான் கட்டியிருந்த சாரியே ஆசிரியையொருவருக்கு எமனான சம்பவமொன்று யக்கலை இப்பாகமுவையில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸை பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளின் பின்னால் ஆசிரியையொருவர் அமர்ந்து சென்றுள்ளார். அவரது சாரி, மோட்டார் சைக்கிளின் பின்னாலுள்ள சில்லில் சிக்கியதால் சைக்கிளிலிருந்து ஆசிரியை கீழே விழுந்துவிட்டார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் மிகவேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் ஆசிரியையின் மீதேறியதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

Comments