புலிகள் புதைத்த பெரும் பணத்தை தோண்டும் இராணுவம் !

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானம் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை தோண்டப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த மயானம் தோண்டப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

தமது காவலில் இருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள். இதில் இருந்து ஒரு விடையம் நன்றாகப் புலனாகிறது. இலங்கை இராணுவமானது தாம் இரகசியமாக தடுத்துவைத்துள்ள புலிகள் உறுப்பினர்களை இன்றும் கூட கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்பது தான். ஒரு காலத்தில் தமிழின விடிவுக்காகப் போராடி இவர்கள் தற்போது கேட்ப்பார் அற்று இலங்கை உள்ள இரகசிய முகாம்களில் வாடுகிறார்கள். இவர்கள் தொடர்பாக சர்வதேச தமிழர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை என்று பலர் குற்றஞ்சொல்லும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட இந்த புலிகள் உறுப்பினர் இப் பிரதேசத்தில் ஆயுதங்களும் பெருமளவான பணமும் இருப்பதாக கூறியுள்ளார். இதனை தோண்டு எடுக்கவே தற்போது விசேட அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இப்போர்வையில் மயானம் முழுவதையும் கிண்டி, கிளறுவார்கள் போல இருக்கே ?

Comments