முதலிரவான சிவராத்திரி


சிவன் ராத்திரிக்கு எங்கே, எந்த கோவிலுக்கு குட்டிகள் வரும் என்று நமது நண்பர்கள் குழு ரூம் போட்டு உட்கார்ந்திருந்து யோசிச்சு கொண்டிருந்தபோது தோன்றியதுதான் பொன்னம்பலவானேஸ்வரர் கோவில்.
சரி என்று கோவிலுக்கு சுமார் 9.00 மணிபோல வெளிக்கிட்டு போனால் தான் தெரிந்தது. நாங்கள் சைட் அடிக்க போகல, பெட்டச்சியள் தான் வயசுப் பெடியங்கள சைட் அடிக்க வந்துட்டாளவ எண்டு.


பெடியங்கள தங்கட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த பெட்டச்சியள் என்ன வேகமாக இருக்கிறாளவ சொல்லவே முடியல.
சிரிப்பில சில்லறை கொட்டும் படி முத்துப் பற்களை காட்டும் காட்டுமிராண்டி சிரிப்புகளும், வெருளல்களும் அப்பப்பா......


ஏழுகழுதை வயசாச்சு இது வரை நான் எநதக் கோவிலுக்குப் போயும் நித்திரை முழிச்சது கிடையாது, இம்முறை நண்பர்களுடன் சைட் அடிக்கிறதுக்காக முதன்முறையாக நித்திரை முழிச்சு சிவராத்திரியை முதலிரவாக நண்பர்களுடன் கொச்சிக்கடை பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் கொண்டாடினேன்.

பின் குறிப்பு: முதலிரவு என்று குறிப்பிட்டது சிவராத்திரிக்கு முதன்முறையாக நித்திரை முழுச்சதை தான் இங்கு முதலிரவு என்று குறிப்பிடடுள்ளேன். தலைப்பைப் பார்த்து ஏதோ திகில் இருக்கும் என்டு நினைச்சிருப்பீர்கள் என்பது மட்டும் புரியுது.

Comments