குட்டக்குட்ட குனியும் தமிழனா?

இலங்கையின் 61ஆவது சுதந்திர தின விழா நேற்றுக் காலை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றபோது இலங்கை ஜனாதிபதியின் முகத்தில் புன்னகையை கூட காண முடியவில்லை. ஏதோ பய உணர்வுடன் காணப்படுவது போன்று போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
இவரின் பார்வை சொல்லும் அர்த்தங்கள் தான் என்னென்னவோ புரியவில்லை.



அடுத்த ஆண்டு சுதந்திர தின உரையில் தமிழ் இனத்தை கூண்டோடு அழித்து விட்டேன் வெற்றி வெற்றி! என்று கூறுமளவிற்கு மஹிந்தவின் படை நடவடிக்கை மிக மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது மட்டுமல்ல, வட மாகாணத்தில் இடம்பெறும் பொதுமக்கள் மீதான தாக்குதலினால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.



மஹிந்த சுதந்திர தின செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது, வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் நிம்மதியாக தமிழன் என்று சொல்லும் அளவிற்கு வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கும் எம் சொந்தங்களை ஏன் தான் அழைக்கின்றாரோ தெரியவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிராக கைது செய்ய தானோ என எண்ணத்தோன்றுகிறது.

எது எப்படியோ இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கைவிட்டு எண்ணக்கூடியதாக இருக்கலாம். அதேநேரம் தமிழர்களுக்கு விடிவு என்பது எப்போது, எப்படி எட்டப்படும் என்று சொல்லமுடியாது போலவே தோன்றுகிறது.



அதுமட்டுமல்ல தமிழ் மக்கள் குட்டக்குட்ட குனிஞ்சு கொண்டே போய் விடுவார்கள் என்று தான் மஹிந்த உட்கார்ந்திருந்து யோசிக்கிறார் போல இருக்கு.

Comments