ஏ-32 பாதை ஓரிரு தினங்களில் திறக்கப்படும்


ஏ-32 பாதை ஓரிரு தினங்களில் திறக்கப்படும் எனவும் இப்பாதையை தற்போது செப்பனிடும் பணியில் பொறியியளாளர்கள் கடுமையாக பாடுபடுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்து 2 மாதங்களாகி விட்டது. இன்னமும் பாதை திறக்கப்படவில்லை. இதுவரை என்ன பனங்கொட்டையா பொறுக்குறீங்கள் என்று கேட்கவே தோன்றுகிறது. இப்பாதை நெடுஞ்சாலையல்ல. குறைந்தளவு தூரத்தைக் கொண்ட ஏ-32 பாதை செப்பனிடும் பணியே இரண்டு மாதங்கள் என்றால் ஏ-9 நெடுஞ்சாலை எப்போது திருத்தியமைக்கப்படும், எப்போது மக்கள் போக்குவரத்து செய்வது? ஏ-9 ஊடாக சித்திரை புதுவருடத்திற்கு சென்று வரும் எனது கனவு நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் பாதை திறக்கப்படும் வரை.

Comments