மனைவியுடன் அன்பாக இருங்கள்....

ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை தங்கள் வலையில் வீழ்த்தி விடுகிற பவர் பெண்களுக்கு உண்டு. (சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பெண்ணின் பார்வையில் விழாத ஆண்களே இல்லையெனலாம்) ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களுக்கு, பெண்களின் 'கருணைப் பார்வை' இருந்தால் தான் முடியும்.

ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

இவை ஒருபுறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்ற வரையறையையும் தாண்டி கணவன்-மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம்.

தம்பதியர் வாழ்க்கையில் sex முக்கிய இடம்பெறுகிறது. இதில், ஒருவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான எதிர்விளைவை அவர்களது முகத்தில் மறுநாள் காலையிலே பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள் அது பற்றி எனக்கு அனுபவத்தில தெரியாதுங்கப்பா...... நான் சின்னப் பொடியன்
செக்ஸ் விஷயத்தில் கணவனின் அன்பான அணுகுமுறையைத் தான் ஒரு மனைவி எதிர்பார்க்கிறாள்.

ஒரு ஆண் தனது செக்ஸ் ஆசையை மனைவியிடம் எளிதில் சொல்லிவிடலாம். ஆனால், பெண் அப்படி அல்ல. அவள் வளர்ப்பு முறையே வேறு. அவள் அதனால், மெல்ல மெல்லத் தான் தனது விருப்பத்தை வெளிப்படுத்த முடியும். இதை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்ள வேண்டும்.

'இன்டைக்கு அது வேண்டாம்' என்று மனைவி சொன்னால் கொஞ்சமும் வெறுப்பை அவள் மேல் காண்பிக்கக் கூடாது. சரி... என்று பாசமாகவே சொல்லிவிட்டு, அவள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்பதை கேளுங்கள். உடல்நலம் சரியில்லையா? டாக்டரை பார்க்க செல்ல வேண்டுமா? என்றெல்லாம் பாசத்தோடு கேளுங்கள். உங்களது அந்த பாசமான கேள்வியே, அவள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஓரளவு சரியாக்கிவிடும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது.

உறவின்போதும் மென்மையான அணுகுமுறையையே பின்பற்றுங்கள். அவள் விருப்பத்தை கேளுங்கள். ஓரிரு நிமிடங்களில் உறவை முடித்துவிட்டு சாக்கு மாடு மாதிரி படுத்து தூங்கி விடாதீர்கள். உறவுக்கு பின்னரும் அன்பாக அவளை வருடி விடுங்கள். ஆதரவாக பேசுங்கள். உறவின்போது அவள் மகிழ்ச்சியாக இருந்தாளா என்பதையும் தவறாமல் கேளுங்கள். அவள் மட்டுமல்ல நீங்களும் மகிழ்ச்சியாக இருந்தீர்களா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

செக்ஸ் விஷயத்தில் உங்கள் அவசரம் மட்டுமே பிரதானமாக இருந்தால் அவளுக்கு விரக்தி தான் மிஞ்சும். என்ன வாழ்க்கை இது? என்று யோசிப்பவள், எனக்குப்போய் கணவன் இப்படி அமைந்து விட்டாரே? என்று நாளடைவில் எண்ணத் தொடங்கிவிடுவாள்.
ஒருவேளை அப்படி நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கையே பிரச்சினைகளின் கூடாரமாகிவிடும். நரகத்தின் வேதனை தான் உங்களுக்கு மிஞ்சும்.
இதெல்லாம் தேவை தானா?
செக்ஸ் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலுமே உங்கள் மனைவியிடம் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

* அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டில் மனைவியை பார்த்ததும் அவளை பாசத்தோடு கட்டித்தழுவுங்கள் (அருகில் யாரும் இல்லாதநேரத்தில் குறிப்பாக பிள்ளைகள் இருந்தால் அவர்கள் இல்லாத இடத்தில்) சில அன்பான முத்தங்களையும் கொடுங்கள். அவளும் தன் பங்குக்கு உங்கள் மீது பாசத்தை கொட்டுவாள்.

* வெளியில் மனைவியுடன் செல்லும்போது அவளை நெருங்கியபடியே செல்லுங்கள். முடிந்தால், அவளது கரத்தை பற்றிக்கொண்டு முடிந்தால் சிற்சில சில்மிஷங்கள் செய்யுங்கள். இந்த பாதுகாப்பையும், அன்பான அரவணைப்பையும் எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பார்கள் என்று பொதுவாக கூறலாம்.

* வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாளாவது சினிமாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். சிரித்துப் பேசுங்கள். மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுங்கள்.

* எந்த விஷயத்திலும் ஈகோ பார்க்காதீர்கள். இதைப்போய் நான் அவளிடம் கேட்க வேண்டுமா? என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களுக்காகவே வாழ வந்தவளிடம், நீங்கள் எந்த விஷயத்தையும் சொல்லலாமே! மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

* எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதானமாகி விடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேச வேண்டும். மனைவி தரப்பில் அமைதி ஏற்படுவதை உணர முடியும்.

இப்படியெல்லாம் உங்கள் மனைவியை வைத்திருந்தால் உங்கள் இல்லமே ஒரு சொர்க்கலோகம் தான். வாழ்க்கை முழுக்க சந்தோஷம் தான்.

(வீரகேசரியில் சுட்டது)

Comments